சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் 41 பேர் கடற்படையினரால் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு தெற்கு கடற்பரப்பில் 715 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக கடற்படை அறிவித்துள்ளது.
சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரே குறித்த படகினை கைப்பற்றியிருப்பதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.
கைதானவர்களில் 06 தொடக்கம் 16 வயதுக்கு உட்பட்ட ஏழு சிறுவர்களும் ஆறு பெண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர்களை கடற்படையினர் கரைக்கு கொண்டுவரும் காட்சியினை கடற்படையினர் காணொளியாக வெளியிட்டிருக்கின்றனர்.
Video - navy.lk